இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு அன்றும் இன்றும் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம்: திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லப நாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு அன்றும் இன்றும் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: