இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜின் தோழியான சுவாதிக்கு எதிராக தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாதி கைக்குழந்தையுடன் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பில் பதில்மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை நேரில் நடத்த வேண்டும் என்று சுவாதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 3க்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்களிக்கப்பட்டது.
The post கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி சுவாதி நேரில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
