நெய்வேலி என்.எல்.சி 2வது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி 2வது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி.யில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் எம்.டி.சி என்னும் இயந்திரத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் தீப்பிடித்து எரிவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து குறித்து என்.எல்.சி. நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெய்வேலி என்.எல்.சி 2வது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: