இதில், மானாம்பதி அரசுப்பள்ளி மாணவர் சூர்யா, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவராக சேர இடம் கிடைத்தது. இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த சூர்யா, தனது பள்ளி தோழர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்தங்கிய கிராமப்புற பள்ளி மாணவர் ஒருவருக்கு செங்கல்பட்டு மாவட்ட மருத்துவக் கல்லூரியிலேயே மருத்துவ மாணவராக பயில வாய்ப்பு கிடைத்திருப்பது அப்பகுதிக்கு பெருமையை சேர்த்துள்ளதாக முள்ளிப்பாக்கம் கிராமமக்கள் தெரிவித்தனர். சூர்யாவின் சகோதரர்கள் இருவரும் டிகிரி முடித்துள்ளனர். சகோதரிக்கு திருமணமாகி விட்டது.
The post மானாம்பதி அரசு பள்ளி மாணவருக்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் appeared first on Dinakaran.