நவராத்திரி கொண்டாடட்டத்தின் முதல் நாள் அக் 15ம் தேதி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை வேறொரு தேதிக்கு மாற்றுமாறு பிசிசிஐக்கு அம்மாநில போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post நவராத்திரி திருவிழா எதிரொலி… உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான தேதி மாற்றம்? appeared first on Dinakaran.