இந்தநிலையில் லதா சந்திரன், பேரூராட்சி தலைவியாக இருந்த காலத்தில் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைதொடர்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் லதா சந்திரன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணிக்கு சென்று சோதனையை தொடங்கினர். இந்த சோதனை மாலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் அதிமுக மாஜி பேரூராட்சி தலைவி வீட்டில் விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு appeared first on Dinakaran.