பிளேடால் குழந்தையை அறுத்து கொல்ல முயன்ற வழக்கில் பாட்டி கைது அணைக்கட்டு அருகே

அணைக்கட்டு, ஜூலை 13: பிளேடால் குழந்தையை அறுத்து கொல்ல முயன்ற வழக்கில் பாட்டியும் கைது செய்யப்பட்டார். அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் சென்னை விமானப்படையில் உள்ள கேன்டீனில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21). தம்பதிக்கு லவா என்ற ஆண் குழந்தை பிறந்து 26 நாட்களே ஆன நிலையில் தாய் வீடான ரெட்டியூரில் குழந்தையும், தாயும் இருந்தனர். இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த மணிகண்டன் கடந்த 10ம் தேதி குழந்தையை பார்க்க மாமியார் வீட்டிற்கு தாயுடன் சென்றார்.

அப்போது, இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் குழந்தையின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச்சென்றார். பின்னர், குழந்தை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து சென்னை தாம்பரத்தில் இருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், குழந்தையை கொல்ல முயன்ற வழக்கில் மணிகண்டனின் தாய் லட்சுமி(55) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஹேமலதா தரப்பில் கொடுத்த புகாரின்பேரில் லட்சுமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post பிளேடால் குழந்தையை அறுத்து கொல்ல முயன்ற வழக்கில் பாட்டி கைது அணைக்கட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: