இந்நிகழ்ச்சிகளின் போது, அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் தற்போது நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு விரைவில் முதல்வரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், பேரூரில் 400 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட உள்ளது. சென்னை மக்களுக்கு 800 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல், 85 லட்சம் மக்களுக்கு 1000 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 250 எம்.எல்.டி. குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.