கிரிக்கெட் வீரர் ஷமி மீதான குடும்ப வன்முறை வழக்கை ஒருமாதத்தில் தீர்க்க உத்தரவு

புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கை ஒரு மாதத்திற்குள் தீர்க்க மேற்கு வங்க செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஷமியின் மனைவி ஜஹான் கடந்த 2018ல் குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் அலிபூர் மாவட்ட கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கடந்த 2019ல் ஷமிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தார். இந்த வாரண்ட்டை எதிர்த்த ஷமின் மேல்முறையீடு வழக்கில், தெற்கு 24 பர்கனாஸ் செஷன்ஸ் நீதிபதி, வாரண்ட்டிற்கு இடைக்கால தடை விதித்தார். இதனை கொல்கத்தா உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அடுத்த ஒரு மாதத்திற்குள் தெற்கு 24 பர்கனாஸ் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்வு காண உத்தரவிட்டது.

The post கிரிக்கெட் வீரர் ஷமி மீதான குடும்ப வன்முறை வழக்கை ஒருமாதத்தில் தீர்க்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: