ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் அதீத வெப்பத்தால் பலியாகி உள்ளனர். இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை..ஒடிசாவில் வெப்ப வாதத்தால் 72 மணி நேரத்தில் 99 பேர் பலி!! appeared first on Dinakaran.