நன்கு விளைந்திருந்த தக்காளி பழங்களை அறுவடை செய்து பெங்களூரு மார்க்கெட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் தோட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய தக்காளியை கொள்ளையடித்து சென்றிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் 50 முதல் 60 பைகளுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தக்காளிகளை அல்லி சென்றதோடு தோட்டத்தையும் நாசம் செய்து சென்றுள்ளனர். இதையடுத்து விவசாயி தரணி ஹளபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 379-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தக்காளி திருடர்களை தேடி வருகின்றனர்.
The post கர்நாடக மாநிலம் தோட்டம் ஒன்றில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்றதால் பெண் விவசாயி அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.