இளைஞர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம்

புதுடெல்லி: இளைஞர் காங்கிரஸ் தலைவராக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஸ்ரீநிவாஸ் பிவி பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் இளைஞர் காங்கிரசார் கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சமூக பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் பிவி பதவி விலக உள்ளார்.

இதையடுத்து உதய் பானு சிப் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று வௌியிட்டார். ஜம்மு காஷ்மீர் இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்த உதய் பானு சிப் தற்போது இளைஞர் காங்கிரசின் பொது செயலாளராக பணியாற்றி வருகிறார்.

The post இளைஞர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: