பாமக பொதுக்குழு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டமன்றத் தொகுதிகளின் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் 10.5 வன்னியர் இட பங்கீடு விளக்க பொதுக்குழு கூட்டம் மணவாளநகரில் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மணவூர் செ.பூபதி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டத் தலைவர் க.சங்கர் வரவேற்றார். பாமக மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இ.தினேஷ்குமார், மாவட்ட தலைவர் பா.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கலந்து கொண்டு 10.5 வன்னியர் இட பங்கீடு குறித்து விளக்க உரையாற்றினார். இதில் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் வ.பாலயோகி, ஒன்றிய கவுன்சிலருமான நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவில் பாமக ஒன்றிய செயலாளர் வே.விஜயராகவன் நன்றி கூறினார்.

The post பாமக பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: