சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என்று உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டப் பொருள்களை உரிய காலத்துக்குள் வழங்கும் வகையில் நாளை ரேஷன் கடைகள் திறக்கப்படும். ஞாயிற்றுக் கிழமைக்கான விடுமுறை வேறு ஒரு நாளில் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.