நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விளைநிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்ற அனுமதி கொடுக்கப்படுகிறது. கேள்வி கேட்கும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வேன் என மிரட்டல் விடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எங்களது வார்டு கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்கிறோம்’ என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் அமர்நாத்துக்கு கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சி தலைவி மற்றும் செயலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
The post 6 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.