கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்

சாலவாக்கம்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் கிளக்காடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கிளக்காடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் கௌரி சம்பத் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக, வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். கிளக்காடி, மாம்பாக்கம், திருவந்தார், புலிப்பாக்கம், சாலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கற்பகவிநாயக மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் காய்ச்சல், சளி, இரும்பல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெற்று சென்றனர்.

இதில் இருதயம், நுரையீரல், கண் ஆகியவற்றை 821 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். 51 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், விஷ்ணு, முரளி உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: