இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவு எண் ஆதாரங்களுடன் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வரும் 30ம்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்கு முன்பு வந்து முன்பதிவு கட்டணம் ரூ.500 செலுத்தி தங்களை பதிவு செய்யதுகொள்ள வேண்டும். பதிவு செய்த ஏலதாரர்கள் ஏலக்குழுவினர் முன்னிலையில் வரும் 3.07.2023 அன்று காலை 11 மணிக்கு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றைய தினமே 100 சதவீதம் செலுத்த வேண்டும். அதற்கான ஜிஎஸ்டி கட்டணம் செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 48 இருசக்கர வாகனங்கள் ஏலம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.