இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், பிரணாய் வெற்றி

ஜகர்தா: இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஜகர்தாவில் நடக்கும் இந்தோனேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் 43 நிமிடங்கள் விளையாடி 21-18, 21-16 என நேர் செட்களில் ஹாங்காங் வீரர் ஆங்குஸ் லாங்கை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

அதபோல் மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். அந்த ஆட்டதில் 45நிமிடங்களில் ஸ்ரீகாந்த் 21-17, 22-20 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்.

இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய இணை சாத்விக்சாய்ராஜ்/சிராக் ெஷட்டி ஆகியோர் 46நிமிடங்களில் 21-17, 21-15 என நேர் செட்களில் சீன வீரர்களான ஜி டிங் ஹீ/ஹோ டோங் சூ இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
அதே நேரத்தில் மகளிர் பிரிவில் முன்னனி வீராங்கனை சிந்து 39 நிமிடங்களிலேயே 18-21, 16-21 என நேர்செட்களில் சீன தைபே வீராங்கனை சூ யிங் டாயிடம் வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூவும் 2வது சுற்றுடன் நேற்று வெளியேறினார்.

The post இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், பிரணாய் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: