கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணாபுரத்தில் மரக்கன்று நடும் விழா

 

பெரம்பலூர்,ஜூன்11: கிருஷ்ணாபுரத்தில் இருந்து கள்ளப்பட்டி வரை நெடுஞ்சாலைச்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராம ரிப்பு உட்கோட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும்விழா நடந்தது.

விழாவில் வேப்பந்தட்டை உதவி கோட்டபொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் ராதா செம்புலிங்கம் ஆகியோர் மரக்கன்று நடும்பணியை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, கள்ளப்பட்டி வரை சாலையின் இரு ஓரங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். விழாவில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணாபுரத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: