லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம்

 

தேவகோட்டை, ஜூன் 11: தேவகோட்டை தாலுகா கிளியூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்(56),அவரது மனைவி சூசை மேரி(52). இவர்கள், தேவகோட்டை நோக்கி திருச்சி-ராமேஸ்வரம் பை பாஸ் சாலையில் டூவீலரில் வந்தனர். சிலாமேக வளநாடு என்ற இடம் அருகே வந்த போது தேவகோட்டை நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: