வேன் மோதி வாலிபர் பலி

 

பரமக்குடி,ஜூன் 11: டூவீலர் மீது சுற்றுலா வேன் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன்(37). இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் டூவீலரில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார். மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது கேரளாவில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சுற்றுலா வேன் மீது நேருக்கு நேராக மோதியுள்ளார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ஜெயேந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post வேன் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: