செங்கல்பட்டு அருகே பரபரப்பு சாலையோர பள்ளத்தில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் கிடந்த, பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலேரிபாக்கம், கெங்கையம்மன் கோயில் எதிரே நேற்று காலை 8 மணியளவில் சாலையோர பள்ளத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆனநிலையில், பச்சிளம் ஆண் குழந்தை பசியால் நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது.

இதை பார்த்ததும் அவ்வழியே நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அக்குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கள்ளத்தொடர்பு காரணமாக பிறந்த ஆண் குழந்தையை யாரேனும், வீசிவிட்டு சென்றார்களா? அல்லது அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்ட குழந்தையா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நேற்று காலை பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு அருகே பரபரப்பு சாலையோர பள்ளத்தில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: