நாசரேத், ஜூன் 8: நெல்லையிலிருந்து தினமும் அரசு பஸ் புறப்பட்டு வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக கல்விளைக்கு செல்கிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் இந்த பஸ் கல்விளையிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்கின்றன. இந்த பஸ் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த பஸ் முறையாக இயக்கப்படாததால் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வங்கிகளில் பணிபுரியும் வைகுண்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அடிக்கடி மாயமாகும் நெல்லை- கல்விளை அரசு பஸ்சை தினமும் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், வங்கி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அடிக்கடி மாயமாகும் நெல்லை-கல்விளை அரசு பஸ் தினமும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.