இதற்கு போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், நீதிமன்றத்தின் நேரம்தான் வீணாகிறது. எனவே, வழக்கு பற்றிய தகவல்கள் தெரிந்த காவலர்களை மட்டுமே அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாநில தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், வழக்குகள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த காவல்துறையினரை மட்டுமே உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியிருக்கிறார்.
The post டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் appeared first on Dinakaran.