மது குடிப்பதை கண்டித்ததால் விவசாயி தற்கொலை

உத்திரமேரூர், ஜூன் 7: உத்திரமேரூர் அருகே கம்மாளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோதண்டம் (55). இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்த கோதண்டத்திடம், குடும்பத்தினர் அனைவரும் சண்டைபோட்டு திட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த கோதண்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைபார்த்த குடும்பத்தினர் அலறியடித்து, கோதண்டத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பெற்றுவந்த கோதண்டம், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது குடிப்பதை கண்டித்ததால் விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: