தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதி நிதி நிறுவன அதிபர் பலி

ஸ்பிக்நகர், ஜூன்4: தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதியதில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பிரேம் ஆனந்த்(45) இவர் ஆழ்வார் திருநகரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது குடும்பத்தினருடன் தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்திநகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆழ்வார் திருநகரியில் நிதி நிறுவன பணிகளை முடித்துக்கொண்டு இரவு பைக்கில் தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தார். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பொட்டல்காடு அருகே சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பிரேம் ஆனந்த் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதி நிதி நிறுவன அதிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: