கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா 1000 பேருக்கு காலை உணவு

தண்டையார்பேட்டை: கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, 1000 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

கலைஞரின் நூறாவது பிறந்தநாள் என்பதால், ஒரு வருடம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடும் விதமாக, கவியரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதையொட்டி நேற்று நிகழ்ச்சி நடந்ததாக, அப்பகுதி திமுகவினர் கூறினர். இந்நிகழ்ச்சியில், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா 1000 பேருக்கு காலை உணவு appeared first on Dinakaran.

Related Stories: