ஆனால் ஒரு வருடத்துக்கு முன் இதே காலக்கட்டத்தில் நாட்டின் மின் பயன்பாடு 13,500 கோடி யூனிட்டாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 10,880 கோடி யூனிட்டாகவும் இருந்தது. இதுகுறித்து ஒன்றிய மின் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இந்தாண்டு கோடை காலத்தில் நாட்டின் மின் தேவை 229 கிகாவாட் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக மின் தேவை எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. ஆனால் இந்த மாதம் முதல் மின் தேவை சற்று அதிகரிக்கலாம்’’ என்றனர்.
The post நாடு முழுவதும் மே மாத மின்தேவை 1.04 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.