சாலையை சீரமைக்க கோரிக்கை

 

மதுரை, மே 30: மதுரை கூடல்நகர் பாலம் இறக்கம் முதல் சிக்கந்தர் சாவடி வரை உள்ள சாலை கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றுக்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, தற்போது ஓரளவு பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சாலை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இச்சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன.இதனால் அடிக்கடி டூவீலர்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: