பழநியில் 12 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

பழநி, மே 27: பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பழநி நகர் மற்றும் அடிவாரம் பகுதியில் மட்டும் 12 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில மதுபான கடைகளின் அருகில் செயல்பட்டு வரும் பார்கள் உரிய அனுமதியின்று செயல்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று பழநி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகர் முழுவதும் செயல்பட்டு வந்த உரிய அனுமதி இல்லாத 12 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்தனர்.

The post பழநியில் 12 டாஸ்மாக் பார்களுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: