பின்னர் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வரின் உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், ஆட்சியர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்களுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த ஆய்வு கூட்டம் குறித்து முதல்வரிடமும் விவரங்களை தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டு போட்டி, கலாச்சார பட்டியலில் இருப்பதை விளையாட்டு பட்டியலுக்கு மாற்றுவது குறித்து முதல்வரிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சிலம்பாட்ட வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளையாட்டு அரங்கம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்ட தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருப்பது குறித்து விரிவான அறிக்கையை கலெக்டரிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post கலாச்சார பட்டியலில் இருக்கும் ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.