தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல்..!!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். அண்ணாமலையின் கருத்துகள் பொய்யானவை; எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: