சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அதற்கான பணி நடந்து வருகிறது. கோவைக்கு குடிநீர் பஞ்சம் வரவிட மாட்டோம். ஆழியாறு அணை தண்ணீரை, குடிநீராக பயன்படுத்த வேண்டும் என்றால் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்து வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து வருகிற தண்ணீருக்காக முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும், கேரளா அரசுடன் பேசி வருகிறார்கள். கடிதமும் எழுதியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
The post சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.