அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் உலக கை கழுவுதல் நிகழ்ச்சி

 

கோவை, மே 6: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு ‘‘கை கழுவுதல்’’ நிகழ்ச்சி நடந்தது.  ஒவ்வொரு ஆண்டும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடுமையான நோய் தொற்றுக்களை தடுப்பதில் கை சுகாதாரத்தின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் சார்பில் கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தாக்கத்திற்கு பிறகு அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது மற்றும் சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்தல் போன்றவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.

The post அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் உலக கை கழுவுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.