எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சேதமடைந்து காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று படப்பை துணை மின் வாரிய அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சாலமங்கலம் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.