சாலை விபத்தில் வாலிபர் பலி

ஸ்பிக்நகர், மே 4: தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த வேம்பு மகன் பாஸ்கர்(28). சிஎப்எஸ்சில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை துறைமுகச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த தெர்மல்நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்ஐ ரிச்சர்ட் ஜோசப் வழக்கு பதிவு செய்தார். பொறுப்பு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

The post சாலை விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: