சூடானிலிருந்து மேலும் 231 பேர் இந்தியா திரும்பினர்

புதுடெல்லி, மே.3: சூடான் நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ‘ஆபரேஷன் காவிரி‘ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மேலும் 231 பேர் நேற்று அகமதாபாத் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 208 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 13 பேர் பஞ்சாப் மற்றும் 10 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.

The post சூடானிலிருந்து மேலும் 231 பேர் இந்தியா திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: