சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும். 130 கி.மீ. வேகத்தை ரயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
சென்னை-பெங்களூரு-மைசூர் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும். தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரிப்பது மூலமாக, பயண நேரம் குறைகிறது. இதுபோல பலவழித்தடங்களில் ரயில்வே தண்டவாளம் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறகிறது.
The post எழும்பூர்-மதுரை இடையே ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.