இதுபோல, பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.400க்கும், ஐஸ் மல்லி, காட்டுமல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.300க்கும் கனகாம்பரம் ரூ.800க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், பன்னீர் ரோஸ் ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.200க்கும், காட்டுமல்லி ரூ.150க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், அரளி பூ, சாமந்தி ரூ.100க்கும், பன்னீர் ரோஸ், சம்பங்கி ரூ.30க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* ஒரு கட்டு வாழை இலை ரூ.800
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு வாழை இலை ரூ.1,500க்கும் சிறிய கட்டுவாழை இலை ரூ.800க்கும், ஒருதலை வாழை இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை ஒரு கட்டு வாழை இலை ரூ.800க்கும், சிறிய கட்டு வாழை இலை ரூ.300க்கும், ஒரு தலை வாழை இலை ரூ.2க்கும் விற்பனை ஆனது.
The post முகூர்த்த நாட்கள் முடிந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை சரிவு: கிலோ தக்காளி ரூ.5, முட்டைகோஸ் ரூ.8; மல்லி கிலோ 200க்கு விற்பனை appeared first on Dinakaran.