தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

தொண்டாமுத்தூர், ஏப்.28:கோவை கணுவாய் டீச்சர் காலனியை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம் (24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மஞ்சுளா தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மனவேதனை அடைந்த சோமு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

மேலும் மனைவி, குழந்தைகளுடன் மாயமானது குறித்து நண்பர்கள், உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். நேற்று காலை இவரை வேலைக்கு அழைக்க வந்த நண்பர்கள், இவர் பெயர் சொல்லி அழைத்தும் வீட்டை விட்டு வெளியே வராததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சோமுவின் சகோதரி மகன் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.