ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் தொடரும் விபத்து-விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் தொடர் விபத்தை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு பலகை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பாம்பாறு அணை பகுதியில் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

அப்பகுதியில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தகவல் பலகை மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. எனவே, பெரும் அசாம்பாவிதம் ஏற்படும் முன்பு அப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் தொடரும் விபத்து-விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: