சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புதுச்சேரி மாஜி அமைச்சர்

துரைப்பாக்கம்: புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவர், நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். துரைப்பாக்கம் சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி, திடீரென மல்லாடி கிருஷ்ணா ராவின் கார் மீது மோதியது. இதில் எதிர்பாராத விதமாக, முன்னால் நின்றிருந்த லாரியின் மீது கார் மோதியது. காரின் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் மல்லாடி கிருஷ்ணா ராவ், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், காரில் இருந்து கீழே இறங்கி டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி பிடித்தார். அப்போது அவர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரிந்தது. அவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய புதுச்சேரி மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: