போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ பவுலா படோசா காலிறுதிக்கு தகுதி

ஸ்டுட்கார்டு: ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடர் நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில், துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர், 1-6, 7-6, 6-3 என லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதிபெற்றார்.

நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் செக்குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா 6-2, 6-7, 7-6 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவின் டோனா வெக்கிச்சை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காஃப்பை ரஷ்யாவின் அனஸ்தேசியா 6-2, 6-3 என வென்று காலியிறுதிக்கு நுழைந்தார்.

ஸ்பெயினின் பவுலா படோசா 6-1, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் சக நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா புக்ஸாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று (21ம் தேதி) கால் இறுதி போட்டியில் பெலாரசின் அரினா சபலென்காவுடன் பவுலா படோசா ேமாதுகிறார்.

The post போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ பவுலா படோசா காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: