சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திடுக: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பாடல் பொறித்த செப்பேடு 750 ஆண்டு மண்ணில் புதைந்து நம் காலத்தில் வெளிப்பட்டது வரலாற்று. வரலாற்று ஆதாரமான செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோயிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டும். கோயிலில் ஓர் சிறப்பு அறை கட்டப்பட்டு அதில் செப்பேடுகள் வைக்கப்பட்டு மக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

The post சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திடுக: அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: