மேட்டுப்பாளையத்தில் செண்டுமல்லி விவசாயம் தீவிரம்

மேட்டுப்பாளையம், ஏப்.19: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கிட்டம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செண்டுமல்லி பூ அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறுகிய காலம் அதாவது மூன்று மாத கால பயிரான இதற்கு தண்ணீர் 8 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சினால் போதுமானது. தற்போது, தமிழகத்தில் கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெப்பத்தின் அளவு 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது.இந்நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, விவசாயிகள் மாற்று யோசனையாக தண்ணீரை குறைவாக உட்கொள்ளும் பயிர்களை நடவு செய்து அதன்மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக, குறுகிய கால மூன்று மாத பயிரான செண்டு மல்லி பூவினை விதைத்து அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த பூச்செடிகளுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விலையும் கிலோவிற்கு ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைத்து வருகிறது. இதுகுறித்து கிட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில்,“தனது தோட்டத்தில் குறுகிய கால பயிரான செண்டு மல்லி பூச்செடிகளை வளர்த்து வருகிறேன். மூன்று மாத காலத்திற்குள் எட்டு முறை அறுவடை செய்யலாம். அதிகபட்சமாக எட்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும். மேலும், பூவின் விலையும் ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைத்து வருவதால் குறைந்த அளவிலான லாபமும் கிடைத்து வருகிறது. கோடை காலங்களில் விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும். இதனை ஈடுகட்டும் வகையில் தண்ணீரினை அளவாக உட்கொள்ளும் செண்டுமல்லி உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதன் மூலம் லாபம் ஈட்டலாம்.

The post மேட்டுப்பாளையத்தில் செண்டுமல்லி விவசாயம் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.