அம்மன் கோயில் விழா

காரைக்குடி, ஏப்.13: காரை க்குடி பாப்பா ஊரணி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் 76ம் ஆண்டு பங்குனி பொங்கல் கரக உற்சவ விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவ ங்கியது. 9ம் நாள் விழாவான நேற்று சந்தி நீர் சேர்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முத்தாலம்மன் கோவில் குளக்கரையில் சக்தி நீருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறுவர்கள், இளைஞர்கள் கையில் கத்தியுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.

The post அம்மன் கோயில் விழா appeared first on Dinakaran.

Related Stories: