பெரியநாயக்கன்பாளையம்வளம்மீட்புப் பூங்காவில் பேரூராட்சித்துறை இயக்குநர் ஆய்வு

பெ.நா.பாளையம்.ஏப்.9: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குரலா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வந்த சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குரலா குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் வளாகத்தில் செயல்படும் வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயாரித்தல், மண் புழு உரம், பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் உயிரி கழிவுகள் மறுசுழற்சியின் மூலம் வேளாண்மை பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஜி.கே.டி பள்ளி அருகே உள்ள குப்பைக் கிடங்கைப் பார்வையிட்ட அவர் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பிலாத வகையில் மக்காத குப்பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ் செயல் அலுவலர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் பேரூராட்சியின் மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கினர். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவராகநாத்சிங், இளநிலை பொறியாளர் வெங்கடாசலபதி, செயல் அலுவலர் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் லலிதாமணி, தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

The post பெரியநாயக்கன்பாளையம்

வளம்மீட்புப் பூங்காவில் பேரூராட்சித்துறை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.