சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா முன்னேற்றம்

சார்ல்ஸ்டன்: கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிச் தகுதி பெற்றுள்ளார். 2வது சுற்றில் கனடாவின் கேத்தரின் செபோவுடன் மோதிய பெலிண்டா 6-0, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் அன்னா பிளிங்கோவாவை (ரஷ்யா) வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் ஷெல்பி ரோஜர்ஸ், கரோலின் டோல்ஹைடு, மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பவுலா படோசா (ஸ்பெயின்), மேக்தா லினெட் (போலந்து) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: