கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

உடன்குடி, பிப்.27: குலசேகரன்பட்டினம் முப்புடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுடலி(63). இவரது கணவர் இறந்துவிட்டதால் சகோதரர் சங்கரநாராயணன் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 25ம்தேதி குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சங்கரநாராயணன் பல்வேறு இடங்களில் தேடியும் சுடலி கிடைக்கவில்லை. இதனால் அவர் வழக்கமாக குளிக்கும் கிணற்றுப் பகுதியில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் விழுந்து சுடலி இறந்துகிடந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: