மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், உலக வனநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மா.கேசவன் முன்னிலை வகித்தார்.